ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

38 தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.

பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

பள்ளி கல்வித்துறையில், வருவாய் மாவட்ட வாரியாக, முதன்மை கல்வி அதிகாரிகளும், ஒன்றியம் வாரியாக, மாவட்ட கல்வி அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர்.

இதில், ௩௮ மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கி, இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான உத்தரவு, சில தினங்களில் வெளியாக உள்ளது. அப்போது, மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர், மாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் இன்று வெளியீடு.

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 
 
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்குகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் விதிகள், இன்று வெளியாகின்றன. தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கமிட்டி அறிவிக்கும் விதிகளின்படி, மாணவர் சேர்க்கை நடக்கும்.

NMMS – 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு. (30 மாவட்டங்கள்) !!!

மாவட்ட வாரியான பட்டியல்   உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும்.

சனி, 29 ஏப்ரல், 2017

2017-18 CRT Trainingல் மாற்றம் !! ?

      ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.     

இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்.30) நடைபெற உள்ளது.

       தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்.30) நடைபெற உள்ளது. 
 
       முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற உள்ளது.

நினைவூட்டல் TET 17

தேவை : 
1. ஹால் டிக்கெட்
2. புகைபடம் அற்றவர் அத்தாட்சி படிவம்
3. புளு+ ப்ளாக் பால் பாயிண்ட் பேனா
4 . அருகில் தேர்வு மையம் இருப்போர் மொபைல் தவிர்க்கவும்
5. டிஜிடல் வாட்ச், துண்டு குறிப்பு சீட்டு தவிர்க்கவும்
நேர ஒதுக்கீடு :

TNTET 2017 - தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

 தேர்வர்கள் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும்.
 தேர்வு மைய நுழைவாயிலில் காவலர்கள் நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
 தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனைப் பேனா மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

TET - 2017 : வாழ்த்துச் செய்தி

        நாளை TET தேர்வு எழுதப்போகும் நாளைய ஆசிரியர்களே நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.தெரிந்த வினாக்களிலலிருந்து தெரியாத யோசிக்க வேண்டிய வினாக்களுக்குச் செல்லுங்கள்.
 
         விடை வராத கணக்கை ஆராய்ச்சி செய்யாமல் அடுத்த வினாவிற்குச் செல்லுங்கள். விடுபட்ட வினாக்களுக்கான விடைகளை கடைசியில் முயற்சிசெய்யுங்கள்.முயற்சி பலன் தரும்.நன்கு படித்து நாளைய தேர்வு நேரத்தை சிறப்பாக யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறப்போகிறீர்கள். நாளைய தினம்சிறப்பாக அமைந்து நீங்கள் வெற்றி பெற குருகுலம்  வாழ்த்துகிறது.

வெற்றி நமதே! நம்பிக்கையோடு படித்ததை மட்டும் திருப்புங்கள்.வெற்றி நமதே!

விரைவில் கல்விதுறையில் நடக்க போகின்ற மாற்றங்கள்?

(1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
(2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
(3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை.

ஆசிரியர் பணிக்கு அவகாசம்.

சென்னை: 'அரசு பள்ளிகளில், 1,114 ஆசிரியர் காலியிடங்களுக்கு, மே, 10 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. 

தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு.

சென்னை: தலைமை செயலகம், சட்டசபை பணிகளில், 1,953 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

டெட் தேர்வு எழுதப்போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க !!!

டெட் எனப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் 7.4 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வின் போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும் டெட் தேர்வுக்கு தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கே வந்துவிட வேண்டும். மேலும் காலை 9.00 மணிக்கு மேல் வருவோர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஸ்காலர்ஷிப் பெற கட்டாயமாகிறது ஆதார்.

கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானிய குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு வகையான ஸ்காலர்ஷிப்களை பெற்று வருகின்றனர். தற்போது அதற்கான பதிவு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

நாளை முதல் TET தேர்வு நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் 598 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த தேர்வில் சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் நாளை டிஇடி முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதற்காக மொத்தம் 598 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 27 மையங்களில் 10  ஆயிரத்து 147 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோர் காலை 8.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். 9.30 மணி வரை சோதனை நடக்கும்.  கருப்பு மற்றும் நீல நிற மை பேனாக்கள்  மூலம் ஓஎம்ஆர் தாளில் அடையாளம் வைத்து விடைஅளிக்க வேண்டும். 

தேர்வு முடிந்த பிறகு ஓஎம்ஆர் தாளின் பிரதியை எடுத்து செல்லலாம். அச்சிட்ட அல்லது கையால் எழுதிய தாள்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு விதிகளை மீறுவோர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.

அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல்.

JEE முதன்மை தேர்வு : உதய்பூர் மாணவன் சாதனை.

ஜேஇஇ (JEE) முதன்மை தேர்வில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த மாணவன் கல்பித் வீர்வால், 360க்கு 360 என முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி மற்றும் முன்னணி இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க். படிப்புகளை படிப்பதற்காக, சிபிஎஸ்இ வாரியம் சார்பில், தேசிய அளவிலான JEE (Joint Entrance Examination) தேர்வை, சமீபத்தில் நடத்தியது. 

TNPSC : குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனி எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,148 பணியிடங்களுக்கு மே 26 வரை விண்ணப்பம் செய்யலாம் எனவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிகள் - அகவிலைப்படி - 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

படிகள் - 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஊதிய விகிதத்திற்கான அகவிலைப்படி - 01.07.2016 மற்றும் 01.01.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2017ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்?

 எச்சரிக்கை!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...!!

⁠⁠⁠👨🏻Dad : மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்
செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..???????

👨🏻Dad: "உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி".என்று.

👦🏻Son : அப்போது அந்த மகன் சொன்னான் .

👦🏻Son: "என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக
இருந்தாள்.

உலகம் போற்றும் அருளாளர்களில் ஆதிசங்கரர் முதன்மையானவர். கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய " பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா " என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில.....


✒எது இதமானது?

தர்மம்.

✒நஞ்சு எது?

பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

✒மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது?

வியாழன், 27 ஏப்ரல், 2017

Smart Ration Card: விவரங்கள் மாற்றம், புகைப்படம் பதிவேற்ற வழிமுறைகள்.

        மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய விரும்புவோர் www.tnpds.gov.in  என இணையதள முகவரி மூலம் சரியான விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சரியான விவரங்கள், புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்: கணினி உதவியுடன் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இதில் பயனாளர் நுழைவு என்கிற பக்கத்தை கிளிக் செய்து, ஏற்கெனவே உங்கள் குடும்ப அட்டையுடன் இணைத்த செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

TET தேர்வறையும் - தேர்ச்சி வழியும்!

தேர்வறையும் - தேர்ச்சி வழியும் - TET சிறப்பு கட்டுரையுடன் பிரதீப் ப.ஆ. பூங்குளம்

* இறுதி மணி துளிகளில்  இடை விடாமல் படித்து வரும் நண்பர்களுக்கு _ வெற்றி சூட வாழ்த்துகள்
* இருக்க கூடிய இரண்டு நாட்களில் செய்ய வேண்டியவை :

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!!

        பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

TNPSC :இளநிலை அறிவியல் அலுவலர், சுகாதார புள்ளியியலாளர் உட்பட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு.

இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அட்சய திருதியை என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்? வணங்க வேண்டிய தெய்வங்கள்.

 
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு, ஜன. 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களின் ஊதியம் ரூ.244 முதல் ரூ.3080 வரை உயரும். ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1540 வரை ஊதியம் உயரும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.986.77 கோடி கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.O.NO:-78 - கருணை அடிப்படையில் பணி நியமனம்- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்.


'டெட்' தேர்வு கண்காணிப்பு : ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு.


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு பின், வரும், 29, 30ல், 'டெட்' தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 1,861 மையங்களில், இந்த தேர்வு நடக்கிறது; 8.47 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., என்ற, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் காகர்லா உஷா தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.

புதன், 26 ஏப்ரல், 2017

🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!"

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

கடி கடி கடி 👊👊

ஓடுற எலி வால புடிச்சா
 "கிங்கு"
தூங்குற  புலி வால புடிச்சா
 "சங்கு"
😃😃
மேல இருந்து கீழ விழுந்தா
 அது "அருவி"
கீழ இருந்து மேல போனா
 அது "குருவி"

வெற்றியை எட்ட நினைப்பவன் எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது.

ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஓட்டப் பந்தயம் நடத்தின. யார் முதலில் டவரின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது, இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.

“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டன.

என்னை வணங்கும் முறை.

நேற்று என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்

நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....

"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...! 📲

>🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, தமிழக உணவு துறை வழங்கியுள்ளது.

💳 தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன.

🔸 தற்போதய நிலவரப்படி, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.

🔹 அதில், 1.31 கோடி கார்டுதாரர்கள், அனைவரின் ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர்.

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சொந்த வீடு என்பது கனவு. போராடினாலும் பலருக்கும் கைகூடாத காரியம்தான். காலம் முழுக்கச் சேமித்தாலும் 45 வயதில் நகரத்தைவிட்டுப் பல கிலோமீட்டர் தாண்டிதான் ஃப்ளாட் ஒன்றை வாங்க முடியும். பணத்தைத் திரட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். மத்திய அரசு ஏற்கெனவே, 'எல்லோருக்கும் வீடு' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தத் திட்டம் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றியமைக்கப்பட்டது.

அரிய செய்தி,


⁠⁠⁠⁠⁠'உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'

  தொகுத்துத் தருபவர்:
   Dr. Gouse MD (Acu) அவர்கள்.
     🌹❤🌺❤🌷❤🌹❤🌺

     !!அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

அரசாணை எண்.270 / 24.04.2017 / விடைதாள் திருத்தும் முகாம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உழைப்பூதியம் உயர்வு.

பள்ளிக்கல்வி இயக்குனராக திரு.இளங்கோவன் நியமனம்.


செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஆசிரியர்கள் ஊக்க ஊதியம்: அமலாகுமா அரசாணை?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள, அரசின் சார்பில், ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, 2005க்கு முன், ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப்பின் சேர்ந்தவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளத்தில், 6 சதவீதம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

TET தேர்வர்கள் 'அஜாக்கிரதை' : டி.ஆர்.பி., மாற்று ஏற்பாடு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டி.இ.டி.,) பலர் கையெழுத்தில்லாமலும், புகைப்படம் இன்றியும் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர்களையும் தேர்வு எழுத வைக்க டி.ஆர்.பி., மாற்று நடவடிக்கை எடுத்து வருகிறது.

'TET' தேர்வுக்கு 3,000 பறக்கும் படை.

     ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், பட்டதாரிகள் காப்பியடிப்பதைத் தடுக்க, 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மூன்றாண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 29, 30ம் தேதிகளில், இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடக்கிறது; 7.50 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். இதற்காக, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்ட ரேஷன் கார்டு: புதுப்பிக்க வாய்ப்பு.

    'ஆதார்' விபரங்கள் பதியாததால், முடக்கி வைக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை, புதுப்பித்து கொள்ளும் வாய்ப்பை, உணவு துறை வழங்கியுள்ளது.

GPF/TPF Account Statement for the year 2014-15 & 2015-16

உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க

வேண்டும்.நீங்கள்உடனடியாக செய்யவேண்டியவை :

ஜனவரிக்கு மாறினால்?

      ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதியாண்டு என்று இருப்பதை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்ற வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி முன் வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்களுடனான நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த யோசனையை தெரிவித்தார்.

மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு! -ஆன்லைன் சிரமத்துக்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் பதில்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
     கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான வேலைகளில் தமிழக அரசு தீவிர காட்டத் தொடங்கியுள்ளது. ' ஏழை, எளிய குழந்தைகளுக்குத் திட்டத்தின் பலன் முழுமையாகச் சென்று சேரும் அளவுக்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கிறோம்' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை செயலர்
உதயசந்திரன் ..எஸ்.

EMIS CORRECTION WORK - Announcement.

*EMIS CORRECTION WORK*
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து விலையில்லா திட்டங்களும் EMIS பதிவுகளைக் கொண்டே வழங்கப்படவுள்ளதால்
அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களின் EMIS பதிவுகளில்
> இனம்
> பாட மொழி
> பஸ் பாஸ்
> சத்துணவு
> ஆதார் எண்போன்ற விவரங்களை சரி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இணை இயக்குனர்  ( நிர்வாகம்)

தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் மே.2017 நடைமுறைகள் :_!!

✍🏼புதிய விண்ணப்பம் (3பக்கம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்

✍🏼ஒரே ஒரு  விண்ணப்பம் வழங்கினால் போதும்.

✍🏼மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2016க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்.

ஜூலை, 25ம் தேதிக்குள் புதிய ஜனாதிபதி!

இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது.

இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன, அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.

விரிவான காப்பீட்டுத் திட்டம்

பள்ளியில் இருந்து வரும் குழந்தையிடம் என்ன கேட்கலாம்?...என்ன கேட்கக்கூடாது?

 பள்ளிவிட்டு வரும் குழந்தைகளிடம் நாம் பேசும் விதத்தில்தான் அவர்களின் படிப்பு ஆர்வம், பள்ளியில் அவர்களுக்கு இருக்கும் நிறைகுறைகளைத் தெரிந்துகொள்ள முடியும். குழந்தைகளின் அன்றைய மீதி நேரத்தையும் உற்சாகமாக மாற்ற முடியும். அதற்கு எப்படியெல்லாம் பேசலாம், என்னவெல்லாம் கேட்கலாம் என விளக்குகிறார், மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் திடீர் பணியிட மாற்றம்.

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 6 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

திங்கள், 24 ஏப்ரல், 2017

Summer Health Tips: உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்.

     நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

Do you know the best home medicines?

      இஞ்சி மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த  தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில்  ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள்.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி மாற்றம்.

மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 72 கல்லுாரிகளில் பருவமுறைத் தேர்வுகள் ஏப்.,22ல் துவங்கின.இந்நிலையில் ஏப்.,29, 30ல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) நடக்க உள்ளது. இதனால் ஏப்.,29ல் நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அத்தேர்வுகள் ஜூன் ௨ அன்று நடத்தப்பட உள்ளது. 
 
மேலும், 'ஏப்.,25ல் அனைத்துக் கட்சி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, வினாத்தாள்களை முன்கூட்டியே மையங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,'' என தேர்வாணையர் முத்துச்செழியன் தெரிவித்தார்.

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.

ரயில் பயணத்துக்கு உதவும் மெகா 'ஆப்' ஜூனில் அறிமுகம்.

ரயில் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவும், மெகா, 'ஆப்' வரும் ஜூன் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர் முகம்மது ஜம்ஷெத், டில்லியில் நேற்று கூறியதாவது:

டி.இ.டி., தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல் .

 ''ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.
பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

பணத்தைவிட மனிதபிமானமே சிறந்தது.

“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.

“வீட்லதான் சார்”

“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”

இதயத்தில் அடைப்பு உள்ளதா ?


இதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.

நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.

வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு
மாறுகிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது...

எட்டாம் வகுப்பு படிக்கும்  மாணவர் தனது  கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

அப்போது ஒரு மாணவர்  கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...

தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும்...

மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.

மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.

அம்மா, உன்னைத் தேடி வருபவர்களுக்கு, நீ சக்திக்கு மீறிச் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. சோடா, கலர் தருவதை இனிமேல் நிறுத்து. நான் அனுப்பும் 120 ரூபாயில் வாழ்க்கையை சிக்கனமாக நடத்து.

நண்பர்களே, இவர்தான் நம் கர்மவீரர் காமராசர்.

தன்னைப் பெற்றெடுத்த அன்னைக்கு 30 ரூபாய் கூடுதலாகத் தரமறுத்த முதல்வரும், 30 ரூபாய்க்காகத் தயங்கித், தயங்கித் தன் மகனுக்கே தூது விட்டத் தாயும், இம் மண்ணில் நரம்பும், இரத்தமும், சதையுமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறதல்லவா....

The Great Education - Book "Pagal Kanavu"

புத்தகத்தால் என்ன பயன்? நேரம்தான் விரயம் ஆகிறது என அதன் அருமை தெரியாதவர்கள் புலம்புகிறார்கள். ஆனால், சரியான ஒரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும்! அதிலும் குறிப்பாக ஆசிரியர் ஒருவர் கைக்கு செல்லும் புத்தகம் அவருக்குப் பிடித்த மானதாக இருந்துவிட்டால், எத்தனையோ மாணவர்களுக்கு அது தூண்டுகோலாக அமைந்துவிடும்.

Space Kid in Tamilnadu

கொண்டாட வேண்டாமா இந்த இளைஞனை?
கருர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிறந்த முஹம்மது ரிஃபாக் ஷாருக் !

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

இன்று உலக புத்தக தினம்!!!


மனதின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை உரக்கச் சொல்லவைக்கும் பேராற்றல் மிக்கவை புத்தகங்கள். படிக்கும்போது மனதுக்குள் பூப்பூப்பதும், பூகம்பம் தோன்றுவதுமான மாயத்தை நிகழ்த்தும் புத்தகங்கள் மனசாட்சியின் ஆன்மவிலாசம். அங்கே யாரும் தவறுதலாய் திரித்துக் கூறமுடியாது. மனது மட்டும் பார்க்கும்… கேட்கும்… அனுபவித்து பரவசப்படும்… அந்த நுட்பமான அறிவு, எழுத்துக்களின் வழியே சிந்தனைகளை தட்டியெழுப்பி நம்மை யாரென்று உலகிற்கு காட்டும். இன்று (ஏப்.,23) உலக புத்தக தினம். படித்த புத்தகத்தையும், எழுதிய புத்தகத்தை பற்றியும் விமர்சிக்கின்றனர்,எழுத்தாளர்கள்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்.

சென்னை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. 

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர். 

சனி, 22 ஏப்ரல், 2017

ஊட்டி - சுற்றுலா

இறைவனின் படைப்புகள் அனைத்தும் உயர்ந்தவை.

🌼" ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔

🌼 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔

🌼 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔

Lab Asst Appointment - Chennai District Selected Candidates List.

சென்னை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆய்வக உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி 22.04.2017 அன்று நடைபெறுகிறது

Flight Ticket Discount to Senior Citizen.

மூத்த குடிமக்களுக்கு 50% கட்டண சலுகை.. வயது வரம்பு 60 ஆக குறைப்பு.. ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு.

✈ சீனியர் சிட்டிசன்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
✈  மேலும் கட்டண சலுகையை பெறுவதற்கான வயது வரம்பையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும் .

    ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 
 

போர் அடிக்குது என்று சொல்லும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம் – கோடை விடுமுறை டிப்ஸ் !!

     கோடை விடுமுறையில் மீண்டும் இந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ், அபாகஸ், கையெழுத்து, கணிதம், கம்ப்யூட்டர் என பல பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூளைப் பகுதியில் உள்ள ஹிப்போ கேம்பஸ் பகுதியில் காணப்படும் நரம்பு செல்கள் அழிந்து, நினைவாற்றல், கற்றல் திறன்களை பாதிக்கின்றன. மாறாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்:

Students Attendance - Percentage Ratio for Easy Calculation. - Elementary School

மாணவர்களின் வருகை சதவீதம் கணக்கிட பட்டுள்ளது. உங்களின் பணி எளிமையாக்க

 வருகை சதவீதம் 
 💐💐💐💐💐💐💐💐💐💐
214-100%.
 
213-99.5%.
212-99%.

211-98.5%.
210-98%.

SPF - சிறப்பு சேமநல நிதி பிடித்தம்- பணிப்பதிவேட்டில் விடுதல் பதிவாக பதிதல் - முதல் பிடித்தற்கான சான்று.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு!!!

        ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர். 

'TET' தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், ஏப்., 29, 30ம் தேதிகளில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 29ல், 2.37 லட்சம் பேர்; 30ல், ஐந்து லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும், 1,861 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களுக்கு, வினாத்தாள் கட்டுகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன; துப்பாக்கி ஏந்திய போலீசாரும் நிறுத்தப்பட உள்ளனர்.

இ - சேவை மையங்களில் புதிய ரேஷன் கார்டு.


அரசு இ - சேவை மையங்களில், புதிதாக ரேஷன் கார்டு பெறவும், ரேஷன் கார்டில் திருத்தம் செய்யவும், 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு மே 19–ந்தேதி தொடங்குகிறது 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 
மே மாதம் 19–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை நடைபெறுகிறது. 
மாறுதலுக்கு வருகிற 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 
என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 
கூறியிருப்பதாவது:–

விடுபட்ட வாக்காளர்களுக்காக ஜூலை 1ல் சிறப்பு திருத்தப் பணி.

கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேராமல் விடுபட்டோருக்காக, சிறப்பு சுருக்க திருத்தப் பணி ஜூலை 1ல் துவங்குகிறது. கடந்த ஆண்டு செப்.1 முதல் செப்.30 வரை வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடந்தது. வாக்காளர்களின் இறுதி பட்டியல் ௨௦௧௭ ஜன.5 ல் வெளியிடப்பட்டது. 
 
இதில், 18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்தோரில் பலர் சேர்க்கப்படாமல் விடுபட்டது தெரியவந்தது.இதனால் விடுபட்டோர்களுக்காக மீண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணியை ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் 2 நாட்கள், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. 2017 ஜன.1ல் 18 மற்றும் 19 வயது பூர்த்தியடைந்தோர் வாக்காளர்களாக சேரலாம். மற்றவர்கள் செப்டம்பர் (அ) அக்டோபரில் நடக்கும் திருத்தப் பணியின்போது சேர்ந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் நடைபெறும் கால அட்டவணை வெளியீடு.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதலுக்குவரும் 
24 முதல் மே 5வரை விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 
மே 19முதல் 31 வரை நடைபெறும் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
கலந்தாய்வு Online மூலமாக நடைபெறும்

வியாழன், 20 ஏப்ரல், 2017

Wikipedia - Introduction!


        விக்கிப்பீடியா (Wikipedia, i/ˌwɪkɪˈpiːdiə/ அல்லது i/ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə) என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். தமிழ் விக்கிப்பீடியாவின் 90,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது. ஏப்ரல் 2017 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதாகும். மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளவில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது. 
 
விரைவு காரணி: உரலி, மகுட வாசகம் ...

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது?

விளையாட்டு என்னவெல்லாம் செய்கின்றது? குழந்தைகள் விளையாட ஏன் பெற்றோர்களும் பள்ளியும் ஊக்கப்படுத்த வேண்டும்?

* நம்பிக்கையை அதிகரிக்கின்றது
* நட்பினை வளர்க்கின்றது
* ஆளுமையை வளர்க்கின்றது

வன சீருடைப் பணியாளர் தேர்வு: தாற்காலிக பட்டியல் வெளியீட்டு.

      தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்ற பெட்ரோலிய விற்பனையாளர் சங்க அறிவிப்புக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை.

🚖 பெட்ரோல், டீசல்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

🚕 நீண்ட நாள்களாக டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூன் 27ல் துவக்கம்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உயர்கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் மற்றும் உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டனர்.

ஒழுக்கம் இப்படியானதுதான்.

அப்பாவும், பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “கண்ணா!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”
பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.
அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”
பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.
“ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்.

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

மாமிசம் மனித உணவா?
.
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
.
.2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

   😊👍🙏ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

#பொன்டாட்டின்னா எமனுக்கே பயம்🤣😂😂🤣🤣

 எமதா்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

இயற்கை விவசாயத்தில் ஹோமியோபதி புரட்சி.

ஹோமியோபதி மருத்துவம் இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு  ஓர் வரப்பிரசாதம்

ஹோமியோபதி இயற்கையுடன் இயைந்த மருத்துவம், அது மண்ணுக்கும் ,பயிர்களுக்கும் எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. மேலும் இயற்கையில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான மருத்துவம்,அதனால் கால்நடைகளுக்கும் அதனை கொடுக்கலாம், இன்றைய கலப்பட உலகில் மண்ணை பாழாக்கி வைத்துள்ளோம், மண்ணின் பழைய சக்தியை மீட்டெடுக்க ஹோமியோபதி விவசாயிக்கு உற்ற நண்பனாக திகழும்.

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,

புதன், 19 ஏப்ரல், 2017

இணையதளத்தில் புது ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் திட்டம்.

புதிய ரேஷன் கார்டு கோரி, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியது. புதிய ரேஷன் கார்டுக்கு, சென்னையில் உணவு வழங்கல் உதவி ஆணையர்; மற்ற பகுதிகளில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப் பிக்க வேண்டும். விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும். உரிய ஆவணங்கள் வழங்கினாலும், அதிகாரிகள், குறித்த காலத்தில், கார்டு வழங்காமல், மக்களை அலைய வைக்கின்றனர்.இதையடுத்து, இணையதளம் வாயிலாக, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை, உணவுத் துறை துவக்கியுள்ளது. 

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந் தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும் தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும்.

பெட்ரோல் பங்க் : மே, 14 முதல் ஞாயிறு விடுமுறை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் செயல்படாது' என, தமிழக பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர், கே.பி.முரளி கூறினார். 

அவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இவற்றில் தினமும் சராசரியாக, 153 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகிறது. பிரதமர் நரேந்திர மோடி, 'பெட்ரோல், டீசல் சிக்கனத்தில், மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்; வாரத்தில் ஒரு நாள், அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது' என்றார். அதை ஏற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மே, 14 முதல், ஞாயிற்று கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது. எங்கள் முடிவுக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

CBSE பள்ளியில் 10ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகிறது.

சி.பி.எஸ்இ., பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாகப்படுகிறது. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார். 

சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரையி்ல் இந்தியை கட்டாயமாக்கப்பட வேண்டும் என பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது. குழுவின் பரிந்துரையை அடுத்து ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.சி மும்மொழிபாடத்திட்டத்தை பத்தாம் வகுப்பு வரையில் கட்டாயமாக்க முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 

TRB மூலம் 6,390 பேருக்கு வேலை.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்த ஆண்டு, 'டெட்' தேர்வு போக, ஆறு போட்டி தேர்வுகள் நடக்க உள்ளன. அதன் விபரம்:

தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு.

கிடப்பில் போடப்பட்ட, அரசின் தொழில்நுட்ப தேர்வு, மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தொழில்நுட்ப தேர்வு முடித்தோர், கூடுதல் பாடப்பிரிவுக்கான சிறப்பு ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுவர். இதற்காக, ஆண்டுதோறும், சிறப்பு தொழில்நுட்ப தேர்வு நடத்தப்படும். 2015, நவ.,க்கு பின், மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை.

ஆய்வக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கல்.

ஆய்வக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; முடிவுகள், மார்ச், 24ல் வெளியிடப்பட்டன.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

How to change PAN card address?

PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?

   ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.

பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.
இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..
இணைய முகவரி

TNTET 2017 - No of blind candidates applied

TNTET 2017 - தாள் 2 (30.04.2017) தேர்வை மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் (சென்னை உட்பட) 1979 மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன்) எழுத உள்ளனர்.


📋 மாவட்ட வாரியாக தேர்வு எழுத உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை. 👇

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 128 கிராமின் டாக் சேவகர் வேலை.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2017-128-ஆம் ஆண்டிற்கான 128 கிராமின் டாக் சேவகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமான www.appost.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Whatsapp - New Version...

வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா... இனி கவலை வேண்டாம்!!! 

      வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்...ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம்.

DSE - New Website Launch soon! - District wise school details need!

பள்ளிக்கல்வி - மின் ஆளுமை - மாவட்டங்கள் வாரியாக இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள்.

ஏப். 23ல் 'செட்' தேர்வு: 60 ஆயிரம் பேர் பங்கேற்பு.

உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், முதுநிலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும். 

'கியூசெட்' தேர்வு: நாளை கடைசி .

மத்திய பல்கலையில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை செயல்படுகிறது. 

ஆதார் அட்டையில் திருத்தம் பணி துவக்கம்.

தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், ஆதார் அட்டை விபரங்களை திருத்தும் பணி நேற்று துவங்கியது.

திங்கள், 17 ஏப்ரல், 2017

"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது...

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

ஆய்வக உதவியாளர் தெரிவு பட்டியல் வெளியீடு - LAB ASSISTANT APPOINTMENT SELECTION LIST Published ...

        பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைந்து தற்போது மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.

தகவல்கள் அவ்வபோது புதுப்பிக்கப்படும்
மாவட்ட வாரியான பட்டியல் 👇