ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....


காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!

இது என்ன நியாயம்????

கலகலவென சிரித்தான் இறைவன் 😃😃😃😃

தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;


தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை,

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு

என்னையே கேட்பது என்ன நியாயம் என்றார்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக