செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

NEET - தேர்வுக்கு ஓராண்டு விலக்கு முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகலாம்.

நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும், தமிழக அரசின் சட்ட வரைவு மசோதாவை ஏற்ற, மத்திய உள்துறை 
அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து முக்கிய அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.

CBSE - பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். 

TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம்16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

முதலாம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு வாழ்த்து கடிதம்.

சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோவை மாவட்டம், சுகுணா பள்ளியில், முதலாம் வகுப்பு படிக்கும், மாணவன் ஸ்ரீவந்த், இந்திய வரைபடம் மற்றும் தேசியக் கொடியை, மூவர்ணத்தில் வரைந்து, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து, முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினான்.

பெண் ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வர அனுமதி உண்டா? - CM CELL REPLY.


திங்கள், 14 ஆகஸ்ட், 2017

பள்ளிக் கல்வி துறையில் 5000 பணியிடங்கள் காலி அதிகாரி தகவல்.


TRB Exam for 38 AEEO Post - Notification Will Pubish Soon.

சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.

1. How Children Learn - John Holt
2. Toto Chan - a little girl in the window
3. Daylight Dream - Jijuba Patekka

NEET தேர்வில் ஓராண்டு விலக்கிற்கு மத்திய அரசு தயார், பழனிச்சாமியுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை.

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

- அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார் என உறுதியளித்து உள்ளார். சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால் மத்திய அரசு ஒத்துழைக்க தயார்.

RTE - ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு.


நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்.

நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;

தமிழில் டி.சி., : தேர்வுத்துறை அறிவுரை.

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழில், ஆங்கிலத்திலேயே பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன. நடப்பாண்டு முதல், மாணவர்களின் பெயர், பள்ளி போன்ற விபரங்கள், மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் இடம் பெறுகின்றன. 

'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!!

தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


தமிழக அரசு, அவசர சட்டத்தை இயற்றுவதால், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிரச்னை, முடிவுக்கு வருகிறது. இதனால், 17ம் தேதி முதல், பிளஸ் 2 தேர்வு முடிவு அடிப்படை யில், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால்  தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை. 75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.

1) மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
2) பயோ கெமிஸ்ட்ரி பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை
3) அரசியல் அறிவியல் பாடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஒருவர்கூட இல்லை

பள்ளி மாணாக்கர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து தலைமையாசியர்களுக்கு அறிவுரை அரசு தேர்வு இயக்ககம் வழங்கி உத்தரவு.

14 ஆயிரம் விதை பந்து தயாரிப்பு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.

நாமக்கல்,:ஏரியில் வீசுவதற்காக, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், 14 ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
 
நாமக்கல் மாவட்டம்,நரசிம்மன் காட்டில் அட்டை கரடு பகுதியில், 100 ஏக்கரில் தென்றல் ஏரி உள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு மரங்கள் இருந்தன.

முகச் சுருக்கங்களை தவிர்க்க 10 நிபந்தனைகள்...

உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும்.