Student லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Student லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த  ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். 

குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தார். அதில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர்  நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.

வெள்ளி, 13 அக்டோபர், 2017

டிப்ளமா நர்சிங் படிக்க வாய்ப்பு.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்பில் சேர, இம்மாதம், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழகத்தில், 23 அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன.

புதன், 4 அக்டோபர், 2017

அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு SMART CARD!

அடுத்த மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதில் மாணவர்களின் ஆதார் எண், ரத்த வகை குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

Phd படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்.

இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஐந்தாண்டு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சி துறையின், தமிழ் மன்றம் சார்பில், அக்., 6ல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

திங்கள், 2 அக்டோபர், 2017

டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்.

பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

1. பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பராமரிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கியிருப்பின் உடனடியாக தேங்கிய நீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்ஜினியரிங் மாணவர்கள் 'அரியர்ஸ்' எழுத சலுகை.

இன்ஜினியரிங் படிப்பில், 'அரியர்ஸ்' வைத்து உள்ள மாணவர்கள், தேர்வு எழுத, அண்ணா பல்கலை, ஓராண்டு சலுகை வழங்கி உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிக்கும் மாணவர்கள், நான்கு ஆண்டு தேர்வுகள் முடித்த பின், தேர்ச்சி பெறாத, 'அரியர்ஸ்' பாடங்களை, அடுத்தடுத்த ஆண்டுகளில் எழுதி வந்தனர். 

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

B.Ed - தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எஸ்.விஜயன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

சனி, 16 செப்டம்பர், 2017

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. 


இந்த தேர்வு எழுத செப்டம்பர் 14ம் தேதி வரை பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது, விண்ணப்பிக்கும் தேதி 18ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்படுகிறது. இதை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புதன், 6 செப்டம்பர், 2017

தேசிய திறனாய்வு தேர்வு 13க்குள் விண்ணப்ப பதிவு.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பங்களை, வரும், 13க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனித வளத் துறை சார்பில், ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களது உயர்கல்வி முடிக்கும் வரை, மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப் பங்களை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள், ஆன் -- லைனில் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. 

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் முதல் நிலை தேர்வுக்கான பயிற்சி செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியை பெற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

அடுத்த ஆண்டுக்கான(2018) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்.

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவில், 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2016 வரை, ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது. இனி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 23 ஆகஸ்ட், 2017

பி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி.

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. 


இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 

சனி, 19 ஆகஸ்ட், 2017

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்.

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. 
 
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. 

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது.

'அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் 
ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்' என, மத்திய 
அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. 

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த 
நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக கொண்டாடப்படுகிறது.

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'.

தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

M.Phil.,Ph.D ஆராய்ச்சி படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.

எம்.பில்., பி.எச்டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற, பாரதியார் பல்கலை கால அவகாசம் வழங்கியுள்ளது.

பாரதியார் பல்கலை மற்றும் அதன்கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளின் கீழ் எம்.பில்., பிஎச்.டி., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை தகுதித்தேர்வு அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளது. 

11-வது பொறியியல் கலந்தாய்வு..! 5,057 பேருக்கு இடம் ஒதுக்கீடு.

பொறியியல் படிப்புக்கான பதினொறாவது நாள் கலந்தாய்வின் முடிவில் 49,130 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது.

ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியநிலையில் நேற்று ஒன்பதாவது நாள் கலந்தாய்வு நடைபெற்றது. பதினொறாவது நாள் கலந்தாய்வுக்கு 8,316 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதில் 5,057 பேருக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,223 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.