சனி, 16 செப்டம்பர், 2017

காசியில் ஏன் கருடன் பறப்பதில்ல

காசியில் ஏன் கருடன் பறப்பதில்ல

➦ காசி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புனித நீராடல் தான். ஆனால் அதையும் தாண்டிய ஒரு சிறப்பானது காசிக்கு உண்டு.

➦ ராமபிரான் ராவணனுடன் நடந்த போரில் ராவணனை வதம் செய்த பிறகு சேதுவில் சிவபூஜை செய்ய தயார் செய்யப்பட்டது.


➦ அச்சமயம் ராமபிரான் அனுமனை அழைத்து காசிக்குச் சென்று சிலிங்கம் கொண்டுவரும் படி உத்தரவு பிறப்பித்தார். ராமபிரானின் ஆணைக்கிணங்க அனுமனும் காசிக்கு புறப்பட்டார்.

➦ காசியை அடைந்த அனுமனுக்கு காசியில் தான் பார்க்கும் இடமெல்லாம் லிங்கமாகவே தெரிந்தது. அதில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்தார்.

➦ அந்த வேளையில் ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருட பகவான் வட்டமிட்டார். மேலும் அதே நேரத்தில் பல்லியும் நல்லுரை கூறினார். கருட பகவான் மற்றும் பல்லியின் வழிகாட்டுதலின் பெயரில் அது சுயம்பு லிங்கம் என்பதை உணர்ந்து அந்த லிங்கத்தை பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

➦ காசி நகருக்கே காவலனாக விளங்கும் காலபைரவர் இந்த செயலின் மூலம் மிகுந்த கோபமடைந்தார். காசியின் காவலனாகிய என்னுடைய அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கூறித்தடுத்தார்.

➦ அச்சமயம் பைரவருக்கும் அனுமனுக்கு கடும் போர் நடந்தது. போர் நடந்த சமயத்தில் தேவர்கள் அனைவரும் பைரவரை வணங்கி இந்த சிவலிங்கமானது உலக நன்மைக்காக தென்னாடு போகிறது என்றும், தங்களால் உலக நன்மை கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்றும் இந்த சிவலிங்கம் தென்னாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

➦ தேவர்களின் வேண்டுகோளுக்கு பைரவர் செவி சாய்த்து சாந்தியடைந்து, சிவலிங்கத்தை கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தன் அனுமதி பெறாமல் சிலிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்த கருட பகவான் காசி எல்லைக்குள் பறக்கக்கூடாது எனவும், பல்லிகள் காசியில் இருந்தாலும் கூட ஒலிக்கக்கூடாது எனவும் பைரவர் சாபமிட்டார்.

➦ பைரவரின் சாபப்படி இன்று வரையிலும் காசி நகரின் எல்லைக்குள் கருட பகவான் பறப்பதில்லை மற்றும் பல்லிகள் ஒலிப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக