சனி, 16 செப்டம்பர், 2017

ஆறு வயது பையன் அவன்...

ஆறு வயது பையன் அவன்.

எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின்
புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது.

அவன்
அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத்
தொடங்கினான்.

ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க
மட்டும் அவனால் முடியவில்லை.


இருபது வருடங்களுக்குப் பிறகு..
அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க
வைக்கும்போது டைரிக்குள் அந்த
புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.
“இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க
கிடைச்சது?”

“ஏன் கேக்குற?”

“இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது.
வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட
கிடச்சு இருக்கு..” சொல்லியப்படியே அவன்
தோளில் சாய்ந்து கொண்டாள்.

நீதி:::::

பூர்வ ஜன்ம பந்தம் இருந்தா எத்தனை வருஷம்
ஆனாலும் உறவு நம்மை விட்டு பிரியாது .. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக