சனி, 16 செப்டம்பர், 2017

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அனைவரும் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

நாம் அறியாதவை !!

🌲 இந்தியாவில் சுமார் 2100 வகையான மரங்கள் உள்ளன. இதில் உயரம் அதிகமான மரம் தேவகுரு என்பதாகும்.

🌳 உயரம் குறைவான மரம் இடமுறுக்கி என்பதாகும். இது 7 அடி உயரம் உடையது.

🌲 உலகிலேயே சிறிய மரம் வில்வோ மரம் தான். இது சுமார் 3 அங்குலம் உயரம் உடையது. இதை செல்லமாக குள்ள வில்லோ என்றும் கூறுவார்கள். இதில் 300 வகைகள் உள்ளன.


🌳 இவை வடக்கே குளிர்மண்டக் காடுகளில் வளர்கின்றன. ஆனால் இந்த குட்டை வில்வோ மரங்கள் கடுங்குளிர் பகுதியான ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகின்றன.

🌲 தைவான் நாட்டில் உள்ள மியு ன்யு ச் என்ற மரம் தான் உலகின் மிகவும் பழமையான மரம் ஆகும். இதன் வயது 4130 ஆண்டுகள் ஆகும்.

🌳 இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள தீவு நாடு ஷெஷல்ஸ். இந்தத் தீவில் கோக்டெமர் என்ற தென்னை மரம் உள்ளது. இந்தத் தென்னையிலிருந்து கிடைக்கும் இரட்டை தென்னை விதையே உலகின் மிகப் பெரிய விதை ஆகும்.

🌲 உலகிலேயே உயரமான மரம் ரெட்வுட் மரமாகும். இது வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ளது. இதன் உயரம் 360 அடி ஆகும்.

🌳 ஆலமரம் இந்தியாவின் தேசிய மரம் ஆகும். இந்தியாவின் கொல்கத்தாவிலும், சென்னை அடையாறிலும் புகழ்மிக்க வயதான மரங்கள் உள்ளன.

🌲 உலகிலேயே பருத்த மரம் ஜயன்ட் சிகோயா மரம் என்பதாகும். இது வட அமெரிக்காவில் உள்ளது. இதன் விட்டம் 32 அடி, உயரம் 275 அடி, நிறை 1385 டன் ஆகும்.

🌳 தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம் ஆகும். வெப்ப மண்டல நாடுகளில் 1500 வகைகள் உள்ளன. அவற்றில் எகிப்து நாட்டின் டம் என்ற பனைமரத்திற்கு கிளைகள் உள்ளன.

குட்டி செய்திகள் :

🌳 அரச மரக்காற்று வயிறு தொடர்பான நோய்களைப் போக்கும்.

🌲 அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஓர் ஆலமரத்தடி.

🌳 நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.

🌲 வேப்ப மரக்காற்று ஆரோக்கியம் தருவது.

🌳 பல் குச்சிக்கு ஆல விழுது சிறந்தது.

🌲 மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.

🌳 வாகை மரத்தழை வாயுவைப் போக்கும்.

அட்சயப்பாத்திரம் :

🌲 மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.

🌳 ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய். மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய். ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.

🌲 இவ்வளவு விலை உயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........

🌳 மரங்கள் இல்லை என்றால் நாம் சுவாசிக்கும் காற்றைக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை தான் ஏற்படும்...

🌲 இயற்கை, மனிதனுக்கு தந்த பொக்கிஷம் தான் இந்த மரங்கள்.... இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபாத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து, காக்க உறுதி எடுப்போம்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக