ஞாயிறு, 19 மார்ச், 2017

ரூ.12க்கு விபத்து காப்பீடு: தபால் துறையின் புதிய சலுகை.

தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து காப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தபால் அலுவலக கணக்குகளில் குறைந்த பட்சமாக, 50 ரூபாய் இருப்பு தொகை வைத்திருந்தாலே, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படுகிறது. இந்த வசதி, தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்களில் துவக்கப்படும் கணக்குகள் அனைத்துக்கும் வழங்கப்படுகிறது.
சேமிப்புக்கணக்கு துவங்குவோர், 12 ரூபாயை கூடுதலாக செலுத்தினால், இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பாலிசியும் கிடைக்கிறது.தபால் நிலையங்களில் வழங்கப்படும் ஏ.டி.எம்., கார்டுகளை, அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களிலும், சேவை வரி இல்லாமல் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக