புதன், 29 மார்ச், 2017

விடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, நாளை மறுநாள் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. பிளஸ் 2வுக்கு மார்ச், 2; 10ம் வகுப்புக்கு, 8ம் தேதியிலும், பொதுத் தேர்வுகள் துவங்கின. பிளஸ் 2வில், 9.33 லட்சம் பேரும், 10ம் வகுப்பில், 10.38 லட்சம் பேரும் தேர்வு எழுதினர். 

பத்தாம் வகுப்புக்கு, நேற்றுடன் தேர்வு முடிந்தது. பிளஸ் 2வில், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியலில் தொழிற்கல்வி உள்ளிட்ட பிரிவுகளுக்கு, தேர்வுகள் முடிந்துவிட்டன. நாளை மறுநாள், மற்ற பிரிவு மாணவர்களுக்கு, இறுதி தேர்வு நடத்தப்படுகிறது. விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்குகிறது. முதலில், மொழி பாடங்களுக்கும், ஏப்., 3 முதல் முக்கிய
பாடங்களுக்கும் திருத்தம் நடைபெற உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக