செவ்வாய், 21 மார்ச், 2017

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்.

கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். கோவை, அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் நடந்த முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் கோவா, புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.


மொத்தம், 26 பணியிடங்களுக்கு, வீரர்கள் தேர்வு நடந்தது. உயரத்தில் தகுதி பெற்றவர்களுக்கு, மார்பளவு பரிசோதனை, உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உட்பட தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் தேர்வானோருக்கு, இன்று முதல், வரும், 24 வரை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக