செவ்வாய், 13 ஜூன், 2017

சி.பி.எஸ்.இ., துணை தேர்வு ஆன்லைன் பதிவு.

சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்காக, ஜூலையில், துணை தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், தாமத கட்டணத்தில், ஜூலை, 3 வரை விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.

இதற்காக மண்டல அலுவலகங்களில், உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின், http://cbse.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக