ஞாயிறு, 25 ஜூன், 2017

#நமக்குவேண்டியதும்வேண்டாததும்!

மனவளக் கட்டுரை!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள், மிதமான மழைக்கு ஏங்காதீர்கள்.
அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள், அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும்,
வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும்.
கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம்.  கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.


3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள்.
வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.
வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை.
கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமானதாகும்!!

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட,
கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்.

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது,  அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!

9. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும்
( பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

10. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்.

11. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக