திங்கள், 4 டிசம்பர், 2017

கடற்படை பணியில் சேர வேண்டுமா!

புதுடில்லி, 'கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள், பொதுச் சேவை 
மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்' என, கடற்படை அறிவித்து 
உள்ளது.இந்திய கடற்படை வெளியிட்டு உள்ள அறிக்கை:நாடு முழுவதும், 
2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுச் சேவை மையங்கள் உள்ளன. 

கடற்படையில் சேருவதற்கு, 'ஆன்லைன்' விண்ணப்பம் நிரப்புதல், 

சான்றிதழ்கள், ஆவணங்கள் பதிவேற்றம் செய்தல்...விண்ணப்ப 
கட்டணம் செலுத்துதல் என, அனைத்து சேவைகளையும், பொதுச் 
சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக, 60 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., வரியும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக