சனி, 18 மார்ச், 2017

5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு

10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பார்லி.யில் லோக்சபாவில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றிற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ராம் அர்ஜூன் மெஹ்வால் கூறியது, ஆஸ்திரேலியாவில் தான் முதன்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் பழக்கத்தில் விடப்பட்டன. இதே போன்று இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படும் என கடந்த 
டிசம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சக்கடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக கொச்சி, மைசூரூ, ஜெய்ப்பூர், ஷிம்லா, புவனேஸ்வர் ஆகிய 5 நகரங்களில் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக