ஞாயிறு, 16 ஜூலை, 2017

'அயல்நாட்டு நகைச்சுவை' நூலிலிருந்து:

முதலமைச்சர்: நம்முடைய உணவு நிலைமை எப்படி உள்ளது?
உணவு மந்திரி: கவலைப்படக் கூடிய நிலையில் இல்லை.
முதலமைச்சர்: அப்படியா... கையில் எவ்வளவு அரிசி உள்ளது?
உணவு மந்திரி: ஐந்தாண்டுகளுக்கு போதுமான இருப்பு உள்ளது.
முதலமைச்சர்: கோதுமை...
உணவு மந்திரி: நான்கு ஆண்டுகளுக்கு தாராளமாக வரும்.
முதலமைச்சர்: சர்க்கரை...

உணவு மந்திரி: மூன்றாண்டுகளுக்கு கவலையே இல்லை.
முதலமைச்சர்: எண்ணெய் வகையறாக்கள்...
உணவு மந்திரி: இரண்டு ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.
முதலமைச்சர்: பின் ஏன், எதிர்க்கட்சிகள் உணவுப் பஞ்சத்தை பற்றி பெரிதுபடுத்தி பேசுகின்றனர்?
உணவு மந்திரி: மன்னிக்கவும்... மக்களின் உணவு நிலைமை பற்றியா கேட்டீர்கள்... நான், நம் இரு குடும்பத்திற்கான கையிருப்பை பற்றி கேட்பதாக அல்லவா நினைத்துக் கொண்டேன்!
(போலந்து நாட்டு சிரிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக