ஞாயிறு, 30 ஜூலை, 2017

#திருக்குறள் - சிலகுறிப்புகள்:

1.திருக்குறள் முதன் முதலில்
அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
2.திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
3.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
4.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள
குறட்பாக்கள்- 380
5.திருக்குறள் பொருட்பாலில் உள்ள
குறட்பாக்கள் – 700

6.திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள
குறட்பாக்கள் – 250
7.திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்
– 1330
8.திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
9.திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் –
42,194
10.திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல்,
37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை
11.திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்
– அனிச்சம், குவளை
12.திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் –
நெருஞ்சிப்பழம்
13.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை
– குன்றிமணி
14.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே
உயிரெழுத்து – ஒள
15.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே
அதிகாரம் – குறிப்பறிதல்
16.திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு
மரங்கள் – பனை, மூங்கில்
17.திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட
(1705) ஒரே எழுத்து – னி
18.திருக்குறளில் ஒருமுறை மட்டும்
பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங
19.திருக்குறளில் இடம்பெறாத இரு
சொற்கள் – தமிழ், கடவுள்
20.திருக்குறள் மூலத்தை முதன் முதலில்
அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
21.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை
எழுதியவர் – மணக்குடவர்
22.திருக்குறளை முதன் முதலில்
ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்
23.திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-
வது உரையாசிரியர் – பரிமேலழகர்
24.திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு
இடங்களில் இடம்பெற்றுள்ளது
25.“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு
குறளில் இடம்பெற்றுள்ளது
26.“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது
27.திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் –
ஒன்பது
28.திருக்குறள் இதுவரை 26 மொழிகளில்
வெளிவந்துள்ளது
29.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர்
மொழிபெயர்த்துள்ளனர்
30.திருக்குறள் நரிக்குறவர் பேசும்
"வக்ரபோலி" மொழியிலும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக