ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.
அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை...

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்

👉 தோல்வியை ஏற்றுக் கொள்ளவும்,
வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

👉 பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...


👉 வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன்,
பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை
ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

👉 பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது
கண்ணியம் என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள்...

👉 சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
சொல்லுங்கள்.

👉மென்மையானவர்கள் இடம் மென்மையாகவும்,
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து
கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

👉 குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

👉 தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக