ஞாயிறு, 16 ஜூலை, 2017

இந்த பொருட்களை நீரில் கலந்து குடியுங்கள்: அற்புதம் இதோ!

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்த, இயற்கையில் ஏராளமான பொருட்கள் உள்ளது.

அதில் மிகவும் சிறப்பான 7 வகை பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.

ஓமம் :


ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள், மாதவிடாய் வலியை ஆகியவற்றை குணமாக்கலாம்.

சீரகம் :

ஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

பார்லி :

ஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை இரவு முழுவதும் வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.

கொத்தமல்லி விதை :

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தலாம்.

வெந்தயம் :

வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம்.

அருகம்புல் :

ஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், இதனால் உடலின் ஆற்றலை அதிகரிக்கலாம்.⁠⁠⁠⁠

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக