ஞாயிறு, 16 ஜூலை, 2017

பாரதியிடம் சொல்லாதீர்கள் ...

பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று . . . பாவம் அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவான் . .
ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய ஜீவாவிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் வார்டு கவுன்சிலரைக் கூட எதிர்க்கத் துணியவில்லை என்று! பாவம் நிமித்திய நெஞ்சை குறுகி மடிவான் . .

மனுநீதி சோழனிடம் சொல்லாதீர்கள்... நாங்கள் நீதியற்று சாகிறோமென்று, பாவம் மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான்
வேலுநாச்சியிடம் சொல்லாதீர்கள்...
எங்கள் பெண்கள் சித்திரவதை படுவதை, பாவம் ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி அழுவாள் . .
சின்னமலையிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் வெளிநாட்டுக்காரனுக்கு இரவு பகலாக வேலை செய்கிறோமென்று, பாவம் சமரசமில்லாமல் வெள்ளையனை எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . .
ராச ராசனிடம் சொல்லாதீர்கள....
நாங்கள் அரேபிய மன்னர்களுக்கு அடிமையாக வேலை பார்கிறோமென்று, பாவம் பெரிய கோயில் உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . .
கட்ட பொம்மனிடம் சொல்லாதீர்கள...
நாங்கள்
வெளிநாட்டு கம்பெனிக்கு கப்பம் கட்டுகிறோமென்று, பாவம் மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . .
சேதுபதியிடம் சொல்லாதீர்கள்...
நாங்கள் கடலில் சுடுபட்டு சாகிறோமென்று, பாவம் நடுக் கடலில் குதித்து சாவான் . .
வ.உ.சி யிடம் சொல்லாதீர்கள்....
நாங்கள் அடிமையாய் வாழ்கிறோமென்று, பாவம் செக்கை தலையில் போட்டு கொண்டு மடிவான் . .
உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.... நாம் அடிமை வர்க்கமில்லை என்று, பாவம் அவர்கள் சுதந்திரமடையட்டும் . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக