புதன், 22 நவம்பர், 2017

'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு திடீர் தள்ளிவைப்பு.

சென்னை: 'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் பணிக்கு, சென்னையில் 
நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது 
குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர், ஜெகநாதன் 
வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான 
தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்ஜினியரிங் பாடங்களுக்கு, 

சென்னை, தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில், நவ., 23 முதல், 
25 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவிருந்தது. இது, நிர்வாக காரணங்களால் 
தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்ஜி., அல்லாத பாடங்களுக்கு, விழுப்புரம் 
மற்றும் மதுரையில் நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, திட்டமிட்டபடி 
நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக