சனி, 18 நவம்பர், 2017

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"


மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக