ஞாயிறு, 16 ஜூலை, 2017

நடந்து முடிந்த முஸ்லிம்களின் பண்டிகை பற்றி இந்து நண்பர் ஒருவர் எழுதியது...!

(நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்...)

இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையான நோன்பு பெருநாள் நடந்து முடிந்தது...

# இன்று
அவர்கள் பட்டாசு வெடித்து காற்றை மாசுபடுத்தவில்லை...

 # நிலத்தையும் குப்பையாக்கவில்லை...


# சாயம் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை கரைத்து நீர் நிலையை மாசுபடுத்தவில்லை...

# எதையும் சாலையில் போட்டு உடைத்து மற்றவருக்கு காயம் ஏற்படுத்தவில்லை...

# சாலையில் நெருப்பு வைத்து கொளுத்தி பிறருக்கு இடையூறு தரவில்லை...

# இன்றைக்கு அவர்கள் தொழுகையை பார்வையிட வந்த காவல் அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்படவில்லை...

# இன்றைக்கு அவர்களுக்கு பயந்து யாரும் கடையை அடைக்கவில்லை...

# இன்றைக்கு அவர்கள் யாரும் சினிமா தியேட்டர்களில் முண்டியடிக்கவில்லை...

# டாஸ்மாக் கடைகளில் எந்த சிறப்பு விற்பனையும் இல்லை...

# சண்டை சச்சரவு வெட்டுக்குத்து குழப்பம் எதுவும் நிகழவில்லை...

# எந்தக் கடைக்காரரிடமும் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் காடைக்காரரைத் தாக்கவில்லை...

இன்று
# அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள்...! மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்...!

# இறைவனுக்காக பலி பிராணிகளை அறுத்து சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் இறைச்சி உணவை வழங்கினார்கள்...!

ஏழைகளுக்கு தங்கள்
செல்வத்தில் 2.5% தொகை ஜகாத் ஆக வழங்குகிறார்கள்...!

எவ்வளவோ நன்மைகள்...!

நாமும் நமது பண்டிகைகளில்
இவற்றைப்போல்
சிலவற்றைப் பின்பற்றி பார்க்கலாமே...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக