ஞாயிறு, 5 நவம்பர், 2017

அண்ணா பல்கலையில் நவ., 3ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், 25ல் நடக்கிறது.

அண்ணா பல்கலையில், நவ., 3ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், 25ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இரண்டு தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக