திங்கள், 23 அக்டோபர், 2017

'கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி.

'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் ஆகிய வற்றின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி என, 131 வகை தலைப்புகளில், போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான, மாணவர்களின் ஓவிய போட்டியில், 'கொசு வந்தது, டெங்கு வந்தது; டெங்குவை பரப்பும் கொசுக்களின் வாழ் இடங்கள்' என்ற தலைப்பும், இடம் பெற்றுள்ளது.சுத்தமான வகுப்பறை, சூப்பரான வகுப்பறை; எனக்கு பிடித்த பெண்மணி, பாக்கெட் உணவுக்கு பை, பை போன்ற தலைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக