வியாழன், 2 நவம்பர், 2017

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்.

முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவம் படிக்கும் மாணவர்கள், முதுநிலை படிப்பில் சேர, 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதில், எம்.டி., - எம்.எஸ்., படிப்புகளுக்கு தனியாகவும், எம்.டி.எஸ்., படிப்புக்கு தனியாகவும், தேர்வு நடத்தப்படுகிறது.

வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான தேர்வு, ஜன., ௭ல், கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வுக்கான, 'ஆன் - லைன்' பதிவு, அக்., ௩௧ல் துவங்கியது; நவ., ௨௭ வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.nbe.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக