வெள்ளி, 6 அக்டோபர், 2017

எம்எல்ஏ.க்கள் தொகுதி நிதி அதிகரிப்பு அரசாணை வெளியீடு.

சென்னை: எம்எல்ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை

தமிழக அரசு வெளியிட்டது.

இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபையில் 19.07.2017 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி வழங்கப்படுகிறது.

இந்த தொகை 2017-2018 முதல் ரூ.2 கோடி 50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இந்த தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படுகிறது. உயர்த்தப்பட்ட ரூ.50 லட்சத்தில் ரூ.40 லட்சத்தை வரையறுக்கப்பட்ட கூறுக்காகவும், ரூ.10 லட்சத்தை வரையறுக்கப்படாத கூறு நிதிக்காகவும் செலவிட வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக