புதன், 19 ஏப்ரல், 2017

கோடை வெப்பம் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு முன்கூட்டியே விடுமுறை.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடை வெயில் அதிகம் உள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வாரம் 21-ந் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து நடக்கிறது. மக்கள் உணர்வுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

நடுநிலைப் பள்ளிகளுக்கு 22-ந் தேதியில் இருந்து விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் தொடக்கப்பள்ளிகளுக்கு 29-ந் தேதிவரை பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, கோடை வெப்பம் காரணமாக தொடக்கப் பள்ளிக்கூடங் களுக்கும் 22-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-ந் தேதியில் இருந்து 29-ந் தேதிவரை நடக்கும் தேர்வுகள் அதற்கேற்றபடி மாற்றி அமைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக