வெள்ளி, 28 ஏப்ரல், 2017

JEE முதன்மை தேர்வு : உதய்பூர் மாணவன் சாதனை.

ஜேஇஇ (JEE) முதன்மை தேர்வில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த மாணவன் கல்பித் வீர்வால், 360க்கு 360 என முழு மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி மற்றும் முன்னணி இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க். படிப்புகளை படிப்பதற்காக, சிபிஎஸ்இ வாரியம் சார்பில், தேசிய அளவிலான JEE (Joint Entrance Examination) தேர்வை, சமீபத்தில் நடத்தியது. 

நாடெங்குமிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். 

இந்த தேர்வில், உதய்பூர் மாணவர் கல்பிட் வீர்வால், 360/360 என முழுமதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்பிட்டின் தந்தை, மருத்துவ உதவியாளர் (கம்பெளண்டர்) என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக