வியாழன், 20 ஏப்ரல், 2017

மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்ற பெட்ரோலிய விற்பனையாளர் சங்க அறிவிப்புக்கு பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை.

🚖 பெட்ரோல், டீசல்களின் கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் மே 14-ம் தேதிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 11-ம் தேதி இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

🚕 நீண்ட நாள்களாக டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
🚗 இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன.

🚚 இந்நிலையில், ஞாயிறுதோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்துள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம்  கூறியது.

🚛 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

🚘 பொதுமக்கள் புகார் அளித்தால், அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக