திங்கள், 3 ஏப்ரல், 2017

பிஎஸ்என்எல் அதிரடி : ஒரு ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா.!

ஒருவழியாக ஜியோவின் ஆக்கிரமிப்பு சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் ஜியோஅடுத்த 3 மாதங்களுக்கான அதன் "கிட்டத்தட்ட" இலவச சேவைகளை அறிவித்துள்ளதை தொடர்ந்து மீண்டும் இந்திய தொலைத்தொடர்பு துறைகளுக்குள் கட்டண யுத்தம் கிளம்பியுள்ளது.
முதலில் ஐடியா நிறுவனம் இன்று அதன் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.300/- கட்டண சேவை சலுகையை முன்னெடுத்துள்ளது. மறுபக்கம் மாநிலத்தின் டெல்காஸ் நிறுவனமான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள சலுகைகள் பயனர்களுக்கு திருவிழாக்காலம் ஆரம்பித்துள்ள ஒரு மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.339/-

நாள் ஒன்றிற்கு 10ஜிபி எம்டிஎன்எல் இப்போது அதன் ரூ.319/- திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வழங்கும் அதன் திட்டத்தை அறிவித்துள்ளது மறுபுறம் பிஎஸ்என்எல் நாள் ஒன்றிற்கு 10ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது2ஜிபி எம்டிஎன்எல் வழங்கும் ரூ.319/- திட்டத்தின் கீழ், பயனர்கள் எம்டிஎன்எல் பிணையத்தில் உள்ள வரம்பற்ற குரல் அழைப்புகளோடு சேர்த்து ஒரு நாளைக்கு 2ஜிபி தரவையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ரூ.319 திட்டமானது தற்போது தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் உள் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.ஞாயிற்றுக்கிழமை மறுபக்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 திட்டமானது ஒரு நாளைக்கு 10ஜிபி அளவிலான தரவு இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வரம்பற்ற இலவச அழைப்புகளை (எந்த நெட்வொர்க்குடனும்) வழங்குகிறது.

ரூ.339/- இந்த பிஎஸ்என்எல் திட்டம் ரிலையன்ஸ் ஜியோவைபின்னுக்கு தள்ளும் ஒரு திட்டம் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேபோல 28 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டா வழங்கும் ரூ.339/- திட்டமும் பிஎஸ்என்எல் ஜியோவிற்கு எதிராய் வெளியிட்ட சிறந்த கட்டண சலுகைகளில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக