வியாழன், 6 ஏப்ரல், 2017

பக்தி சேரும்போது.


👉சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!

👉பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!

👉தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.!

👉பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!

👉இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!

👉பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!

👉செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!

👉வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!

👉பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!

👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!

🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!

🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக