ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு -இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி 
நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 
24 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த 
மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 
விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கான 
தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
 அலுவலர்களால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) அன்று 
வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 
விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் 
அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவு 
செய்யப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய 
தேதிகளில், கீளே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களுக்கு 
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர வேண்டும். 
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பத்தில் 
தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்கள் 
சரிபார்க்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் 
அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே 
மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு 
நாளுக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்
 கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்குப்
 பின், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, அவர்கள்
 பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் 
சரிபார்ப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த 
மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயார் 
செய்யப்படும். அந்தத் தகுதிபட்டியலின் 
அடிப்படையில், நடைமுறையில் உள்ள இனசுழற்சி, 
இதர உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 
காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தெரிவு 
செய்யப்பட்டு, தெரிவுப்பட்டியல் சம்மந்தப்பட்ட மாவட்ட 
முதன்மைக் கல்வி அலுவலர்களால் உடனடியாக 
வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 
கலந்தாய்வின் மூலம் உரிய பணி நியமன ஆணை
 சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால்
 வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக