வியாழன், 11 மே, 2017

அரசு கல்லூரி விண்ணப்பம் மே 22 வரை வினியோகம்.

       அரசு கல்லுாரிகளில், மே, 22 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.      அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்காக, ஒரு வாரமாக, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளில், விண்ணப்பங்களை பெற்று, அதை, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 10 நாட்களில் சமர்ப்பிக்கலாம் என, கல்லுாரி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில், நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. எனவே, மே, 22 வரை, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக