பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டுவாசலில் அமர்ந்தபடி வேதபாடங்கள் படித்துக்கொண்டே இருப்பார்.
இதை எதிர்வீட்டு இளைஞன் ஒருவன் பல நாட்களாக கவனித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், " தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே... இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,
" ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே !
அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது !
பெரியவர் சொன்னார், " தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன் "
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது !
இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது.
பெரியவர் சொன்னார்,
" இன்னும் ஒரு முறை " .
இளைஞன் மீண்டும் முயன்றான்.
ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது.
பெரியவர் கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் ". இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது? " தண்ணீர் பிடித்தான்.
வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில் !
" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க ?" என்றான்.
அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது?"என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது "
"இப்போ பார் " என்றார்.
தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.
எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும்மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாச்சு.
அது போலத்தான் மனசும் !
படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளத்திற்குள்ளே இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார் !
இதை எதிர்வீட்டு இளைஞன் ஒருவன் பல நாட்களாக கவனித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான், " தாத்தா! எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே... இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்.
பெரியவர் சொன்னார்,
" ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும் ".
"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே !
அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க ?" என்றான்.
தாத்தா சிரித்தபடி கூறினார்,
" எனக்கு ஒரு உதவி செய். நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்".
இளைஞன் கேட்டான்,
" என்ன உதவி தாத்தா? "
பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாட்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது !
பெரியவர் சொன்னார், " தம்பி, அதோ இருக்குற பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன் "
இளைஞனுக்கு சிரிப்பு வந்தது !
இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.
அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது.
பெரியவர் சொன்னார்,
" இன்னும் ஒரு முறை " .
இளைஞன் மீண்டும் முயன்றான்.
ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?
மீண்டும் சிந்திப் போனது.
பெரியவர் கேட்டார்,
" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் ". இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்.
"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது? " தண்ணீர் பிடித்தான்.
வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில் !
" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க ?" என்றான்.
அவர் புன்னகையோடு சொன்னார்,
" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது?"என்றார்.
இளைஞன் சொன்னான் ,
" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது "
"இப்போ பார் " என்றார்.
தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார்,
" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.
எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும்மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாச்சு.
அது போலத்தான் மனசும் !
படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளத்திற்குள்ளே இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார் !
- நன்றி தில்லைக்குமார், பரமத்திவேலூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக