ஞாயிறு, 14 மே, 2017

விமான படைக்கு திருச்சியில் ஆள் தேர்வு.

திருச்சியில், வரும், 20 மற்றும் 22ம் தேதி, விமானப் படைக்கு ஆள் தேர்வு நடைபெற உள்ளது.திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில், தேர்வு நடைபெறும். இதில், 1997 ஜூலை, 7ல் இருந்து, 2000 டிச., 20க்குள் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
குறைந்தது, 50 சதவீதம் மதிப்பெண்கள் வேண்டும். ஆங்கிலத்திலும், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.தேர்வுக்கு வருவோர், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை, எடுத்து வர வேண்டும். நகலில் சான்றொப்பமிட்டு கொண்டு வர வேண்டும்.

மே, 2௦ல், நடைபெறும் தேர்வில், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார், திருவாரூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்தவர் களும் பங்கேற்கலாம்.

வரும், 22ல் நடைபெறும் தேர்வில், வேலுார், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணா மலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலுார், நீலகிரி, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, www.airmenselection.gov.in இணையதளத்தை பார்வையிடலாம். 044 - 2239 0561 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக