வியாழன், 18 மே, 2017

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 19) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளை 19.05.2017 காலை 10.00 மணி முதல்


☆ 👉 www.dge1.tn.nic.in

☆ 👉 www.dge2.tn.nic.in

🔹 என்ற இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
எனவும், மாணவர்கள் அளித்துள்ள மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔸 இந்த தேர்வுகளிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்கள் விவரம் வெளியிடப்படாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

🔹 மறு கூட்டலுக்கு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

🔸 இதற்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ரூ.305 ஆகவும், மற்ற பாடங்களுக்கு ரூ.205 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

         தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச்மாத 8 ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற்றது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு எழுதினர்.

            பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள். சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது. 

            தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in, மற்றும் www.dge2.tn.nic.in, இணையதளங்களில் காணலாம். மாணவர்கள் குறிபிட்டு உள்ல செல்போனுக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும். 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜூன்மாதம் இறுதியில் நடைபெறும். மறுகூட்டலுக்கு 19 ந்தேதி முதல் 22 ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.மறு கூட்டலுக்க்கான கட்டணம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தலா ரூ.305 மற்றபாடங்களுக்கு தலா ரூ.205 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 25 ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக