திங்கள், 15 மே, 2017

மத்திய அரசில் 2221 வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசு பணியான தில்லி காவல்துறை துணை ஆய்வாளர், துணை ஆய்வாளர் (ஜி.டி.) சிஐஎஸ்எப்பில் துணை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2221 பணியிடங்களுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2221
பணியிடம்: இந்தியாவின் எந்த பகுதியிலும்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Sub-Inspector (Male) in Delhi Police - 616
2. Sub-Inspector in Delhi Police/ Female - 256
3. Sub-Inspector (GD) in CAPFs Male - 697
4. Sub-Inspector (GD) in CAPFs Female - 89
5. ASI (Executive) Male in CISF - 507
6. ASI (Executive) Female in CISF - 56
தகுதி: 01.01.2017 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: Sub-Inspector (GD) in CAPFs: (Central Armed Police Forces) மாதம் ரூ.35400 - 112400 வழங்கப்படும். Sub Inspector (Executive) - (Male/ Female) in Delhi Police பணிக்கு மாதம் ரூ. 35400 - 112400 வழங்கப்படும். Assistant Sub-Inspector (Executive) in CISF பணிக்கு மாதம் ரூ.29200 - 92300 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு, உடற்திறன் தகுதி தேர்வுகளான PET, PST தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/FinalSICPO2017.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிக்கை லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக